உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னைக் காப்பவரே -2
நாளெல்லாம் கரம் பிடித்து நடத்தினீரே -2 -உங்க கிருபை
போகும் போதும் வரும் போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கி சுமந்தீரே -2
பகலினிலும்.. இரவினிலும்.. -2
தூங்காமல் கண் விழித்துப் பாதுகாத்தீர் -2-உங்க கிருபை
காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர் -2
கண்ணீரெல்லாம்.. துடைத்து விட்டீர்.. -என்
கவலையை களிப்பாக மாற்றி விட்டீர் -2-உங்க கிருபை