எல்லை இல்லா கிருபை
நம் இயேசு தேவன் அருள்வார் -2
தொல்லை மிகுந்த வாழ்வில் -2
இயேசு துணையாய் வந்து காப்பார் -2- எல்லை இல்லா
மனிதன் கதவை அடைப்பான்
நம் இயேசு அதனைத் திறப்பார் -2
மனித உள்ளங்கள் மாறும்
நம் இயேசு என்றும் மாறார் -2- எல்லை இல்லா
பூர்வ நாளை நினைத்தேன்
உம் புண்ணிய செயலை உணர்ந்தேன் -2
எண்ணில்லா நன்மைகள் அடைந்தேன்
என் இயேசுவை என்றும் மறவேன் -2- எல்லை இல்லா
நெஞ்சம் நொந்த போது
நல் தஞ்சம் தந்த தேவன் -2
நான் வாடி நின்ற போது
என்னைத் தேடி வந்த தேவன் -2- எல்லை இல்லா
வீசும் புயலின் நடுவில்
கலங்கும் வாழ்க்கைப் படகில் -2
இயேசு துணையாய் வருவார்
என்னை பாசமுடன் அழைப்பார் -2- எல்லை இல்லா